கதிரவன் எழுகின்ற காலையில் | Kathiravan elukinra kaalaiyil

கதிரவன் எழுகின்ற காலையில் | Kathiravan elukinra kaalaiyil

கதிரவன் எழுகின்ற காலையில் | Kathiravan elukinra kaalaiyil
கதிரவன் எழுகின்ற காலையில் | Kathiravan elukinra kaalaiyil

இறைவனைத் துதி செய்ய எழுந்திராய்
 
கதிரவன் எழுகின்ற காலையில் இறைவனைத்
துதி செய்ய மனமே - எழுந்திராய்
 
வறண்டு தண்ணீரற்ற வனம் இந்தப் புவிதனில்
திரண்ட தயை தேவை - நாடுவேன் 
 
கடவுளின் வல்லமை, கன மகிமை காணும்
இடமதில் செல்வதே - என்இஷ்டம் 
 
ஜீவனைப் பார்க்கிலும் தேவனின் காதலை
ஆவலாய் நாடி நான் - போற்றுவேன் 
 
ஆயுள் பரியந்தம் ஆண்டவர் நாமத்தை
நேயமாய்ப் பாடி நான் - உயர்த்துவேன்
 
மெத்தையில் ராச்சாமம் நித்திரை கொள்கையில்
கர்த்தரின் செயல்களைச் சிந்திப்பேன்
 
அல்லும் பகலும் நான் அவர் செட்டைகளின் கீழ்த்
தொல்லைக்கு நீங்கியே - ஒதுங்குவேன்
 
ஆத்துமம் தேவனை அண்டிக் கொள்ள அவர்
நேத்திரம் போல் என்னைக் காக்கிறார்