Kirubai Nirainthavarae | கிருபை நிறைந்தவரே
Kirubai Nirainthavarae | கிருபை நிறைந்தவரே
கிருபை நிறைந்தவரே
உம் கரம் எனக்காதரவே – 2
வருவீர் என் பாதையில்
தருவீர் எனக்கானந்தமே – 2
கிருபை நிறைந்தவரே
கண்ணீரின் பாதையிலே
உம் கரத்தால் தாங்கிடுமே – 2
நெருக்கத்தின் நேரத்திலே
எனக்காக (துணையாக) நீர் நின்றிடுமே – 2
கிருபை நிறைந்தவரே
பாதங்கள் இடரும்போது
நல்ல பாதையில் நடத்திடுமே – 2
சோதனை பெருகும்போது
உம் மார்போடு அணைத்திடுமே – 2
கிருபை நிறைந்தவரே




