Karththaraiyum Avar Vasanaththaiyum | கர்த்தரையும் அவர் வசனத்தையும்
Karththaraiyum Avar Vasanaththaiyum | கர்த்தரையும் அவர் வசனத்தையும்
கர்த்தரையும், அவர் வசனத்தையும்,
ரசிப்போமா, கொஞ்சம் ருசிப்போமா – 2
வானமும் பூமியும், ஒழிந்துபோகும் வார்த்தை ஒழியுமோ -2
பூக்களும் உலரும் புல்லும் அழியும் வசனம் அழியுமோ – 2
ஆண்டவரின் வசனம் அது நிலைத்து நின்றிடுமே - 2
கட்டளைகளும் கற்பனைகளும் நித்தியம் நித்தியமே -2 ....(கர்த்தரையும்)
காலுக்கு தீபம் பாதைக்கு வெளிச்சம் வசனமல்லவோ -2
தங்கத்தை விட தேனையும் விட உசந்ததல்லவோ -2
ஆண்டவரின் வசனம் அது மனது மகிழுமே -2
கீழ்ப்படிந்து நடந்தா என்றும் நன்மை நிகழுமே -2 ....(கர்த்தரையும்)
குற்றங்கள் இல்லா குறையும் இல்லா வசனப் புத்தகமே -2
ஆத்துமாவுக்கு இரட்சிப்பை தரும் பொக்கிஷ பெட்டகமே -2
பேதைகளுக்கு எல்லாம் அது ஞானம் கொடுக்குமே -2
சத்தியத்தை விரும்புவோர்க்கு அழைப்பு கொடுக்குமே -2 ....(கர்த்தரையும்)




