Kaariyam Vaaykkum | காரியம் வாய்க்கும்

Kaariyam Vaaykkum | காரியம் வாய்க்கும்

Kaariyam Vaaykkum | காரியம் வாய்க்கும்
Kaariyam Vaaykkum | காரியம் வாய்க்கும்

உன் காரியத்தை வாய்க்கப்பண்ணும் கர்த்தர்

உன்னோடு இருக்கின்றார்

உன்னைப் பேர் சொல்லி அழைக்கும் கர்த்தர்

உன்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார் – 2

 

 

உன் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில்

கர்த்தரால் காரியம் வாய்க்கும் – 2

 

 

உன் கண்ணீரைத் துடைத்திடும் கர்த்தர்

உனக்குள் வசிக்கின்றார் – 2

உன்னைத் தமக்கென்று பிரித்தெடுத்து

தம் மகிமையால் நிரப்பிடுவார் – 2 – உன் காரியம்

 

 

உன் நினைவு அவர் நினைவு அல்ல

மேலானதை செய்வார் – 2

உன்னை உடைத்து உருவாக்கும் குயவன் அவர்

உன்னை சிறப்பாய் வனைந்திடுவார் – 2 – உன் காரியம்

 

 

உன் ஜெபத்தினை தொடர்ந்திடு மகனே (மகளே)

ஜெபத்தால் ஜெயம் ஜெயமே

உன் பாதைகளைக் கர்த்தர் உயர்த்திடுவார்

உன் தடைகளை நொறுக்கிடுவார் – 2 – என் காரியம்

 

 

என் காரியத்தை வாய்க்கப் பண்ணும் கர்த்தர்

என்னோடு இருக்கின்றார்

என்னைப் பெயர் சொல்லி அழைக்கும் கர்த்தர்

என்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார் – 2

 

 

என் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில்

கர்த்தரால் காரியம் வாய்க்கும் – 3